வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 வருட விசா வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
Mayoorikka
3 years ago
இலங்கையிலுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு வருட விசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து வருடங்களாக நீடிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தலைமையில் இன்று இலங்கை முதலீட்டுச் சபையில் இடம்பெற்றது.
இதன்போது, விசா தொடர்பான முதலாவது சான்றிதழ் லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தாவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.