ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் இந்தியாவாக மாறும் இலங்கை

Kanimoli
3 years ago
ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் இந்தியாவாக மாறும் இலங்கை

அண்மைய நாட்களில் இலங்கையில் நடைபெறும் போக்குவரத்து நடைமுறைகள் இந்தியாவை போன்று உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இலங்கையில் எரிபொருள் இல்லாமையினால் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பாடசாலை மாணவர்கள், அலுவலக பணிகளை முடித்து வீடு திரும்புவோர் என பலரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்திற்கு மேல் எரிய உயிரை பணயம் வைத்து மாணவர் வீட்டிற்கு செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக சனத்தொகையை கொண்ட இந்தியாவில் இவ்வாறான ஆபத்தான பயணங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். வேலைகளை முடித்து ரயிலில் அல்லது பேருந்து செல்வோர் அதன் மேல் ஏறிச் செல்லும் காட்சிகள் பல வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4