இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசா 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும்
Kanimoli
3 years ago
இலங்கையரை திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வதிவிட விசா 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஒரு வருட காலத்துக்கு இத்தகைய விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது 5 வருட காலத்துக்குரியதாக அதிகரிக்கப்படும் எனவும், எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிமை வரை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தம்மிக பெரேரா கூறினார்.
இதேவேளை கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒருநாள் சேவைகள் கண்டி, மாத்தறை, வவுனியாவிலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரமபிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே