6 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள IMF உடன் பிரதமர் பேச்சுக்களை ஆரம்பித்தார்: வஜிர அபேவர்தன

Prathees
3 years ago
6 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள IMF உடன் பிரதமர் பேச்சுக்களை ஆரம்பித்தார்: வஜிர அபேவர்தன

6 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதில் 5 பில்லியன் டொலர் எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுக்காக செலவிடப்படும் என்றும், மீதமுள்ள 1 பில்லியன் டொலர் ரூபாயை வலுப்படுத்த பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை தற்போது 55 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது எனவும், இந்தக் கடனை மீளச் செலுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கங்களில் ஒன்றாக எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சூத்திரத்தின் மூலம் விலைகள் அதிகரிப்பதுடன் குறையும் எனவும் திரு அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டங்கள் அமுல்படுத்தப்படலாம் என்றும், ஒரு நிறுவனம் 100 சதவீதம் லாபம் ஈட்டினாலும், 500 சதவீதம் லாபம் கிடைத்தாலும், அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4