ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பணம் எங்கே போனது?

Prathees
4 years ago
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பணம் எங்கே போனது?

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் தொகை எந்த அரசாங்க அறிக்கையிலும் காட்டப்படவில்லை என கடந்த கோப் குழுவில் தெரியவந்துள்ளது.

எனவே, அதனை உடனடியாக ஒரு மாத காலத்துக்குள் சீர்செய்யுமாறு கோப் குழு உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்  தெரிவித்தார்.

இது தொடர்பில் நிதியமைச்சு துறைமுக அதிகாரசபையுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரசுரங்களில் உள்ளடக்கி கோப் குழுவிற்கு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு கோப் தலைவர் சிபாரிசு செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கோப் குழுவின் தலைவர்,

அதை சரி செய்ய வேண்டும்.இது உண்மையில் கடன் செலுத்துதல் ஆனால் அது எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் துறைமுக குத்தகை பணத்தில் ஒரு  சதம் கூட திருப்பி செலுத்தப்படவில்லை.

இந்தக் கடன்கள் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் எடுக்கப்படுவதாகவும், விரைவாகத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்றும் கூறுகிறார்கள்.

ஹம்பாந்தோட்டையில் இன்னொரு நிறுவனம் உள்ளது. இது பதுங்கு குழிகளுக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய நிறுவனம்.

நிறுவனம் 24 மில்லியன் டொலர் கடன் வாங்கியுள்ளது. அந்த கடன்களில் இருந்து எரிபொருள் வாங்கப்பட்டுள்ளது.

21 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4