தனது நிலங்களை விவசாய நோக்கங்களுக்காக ஓராண்டுக்கு குத்தகைக்கு விடவுள்ள ரயில்வே

Prabha Praneetha
4 years ago
 தனது நிலங்களை விவசாய நோக்கங்களுக்காக ஓராண்டுக்கு குத்தகைக்கு விடவுள்ள  ரயில்வே

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை விவசாய நடவடிக்கைகளுக்காக குறுகிய கால அடிப்படையில் அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட காணிகளின் மொத்த பரப்பளவு சுமார் 14,000 ஏக்கர் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமானது எனவும், இதில் 10% பல்வேறு நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உடனடியாக தேவைப்படும் காணிகளை அல்லாமல், பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வகையில் புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்களை ஒட்டி அமைந்துள்ள காப்புக்காணிகளை குத்தகைக்கு வழங்குவதே பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த காணிகளை விவசாய தேவைகளுக்காக வழங்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் ஏற்கனவே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பயிர்ச்செய்கையாளர்கள், புகையிரத பாதைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமையளித்து இந்த காணிகள் ஒரு வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4