மத்திய வங்கியின் ஆளுனராக நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார்

Prabha Praneetha
4 years ago
மத்திய வங்கியின் ஆளுனராக நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவை நீடிக்குமாறு அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4