சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Prabha Praneetha
4 years ago
சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சைக்கிளில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையில் 1022 உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்களில் 96 சைக்கிள் செலுத்தியவர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இரவு நேரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் மின் விளக்குகளை ஒளிரச் செய்து கொண்டு பயணம் செய்யுமாறு கோரியுள்ளார்.

கடுமையான நிறத்தை உடைய உடைகளை இரவில் அணிந்து பயணம் செய்ய வேண்டாம் எனவும் நீதி சமிக்ஞைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் மோட்டார் போக்குவரத்து பொலிஸார் சைக்கிள்களை பரிசோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4