நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக சமையலறையில் அதிகளவு முந்திரி

Nila
4 years ago
நெருக்கடிக்கு மத்தியிலும் கொழும்பு துறைமுக சமையலறையில் அதிகளவு முந்திரி

கொழும்பு துறைமுகத்தில் உணவுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் பாதி முந்திரிக்கு செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, கொழும்பு துறைமுக சமையலறையை பார்வையிட்ட துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முந்திரிக்கு பதிலாக வேறு மாற்று உணவுகளை உணவில் சேர்க்குமாறு  அங்குள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் கொழும்பு துறைமுகத்தில் ஒரு சாப்பாடு சுமார் ரூ. 450 மற்றும் கொழும்பு துறைமுக சமையலறையில் 5,000 ஊழியர்களுக்கு மதிய உணவும், 3,500 ஊழியர்களுக்கு இரவு உணவும் வழங்கப்படும்.

சமையல் அறையில் சமையல்காரர் இல்லை என ஊழியர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த வெற்றிடத்திற்கு பொருத்தமான ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4