அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன!

Prabha Praneetha
4 years ago
அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன!

அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு  வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறுவர்களைக் கொண்டு செல்லுமாறும் அவர் கோரியுள்ளார்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக சிறுவர்களை அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்ல பெற்றோர்கள் பின்வாங்குவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், சிறந்த சத்தான உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் என நோய் விசேட வைத்தியர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4