திருத்தப்பணிகள் காரணமாக நுரைச்சோலை 2 ஆவது மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளன!
Reha
2 years ago

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்படவுள்ளன.
திருத்தப்பணிகள் காரணமாக அதன் தொழிற்பாடுகள் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளன.
இதன்காரணமாக 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



