சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது!

Mayoorikka
4 years ago
சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது!

சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பில் இன்று(15) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

50 ஆண்களும் 11 பெண்களும் 3 சிறார்களுமே இலங்கை கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 07 ஆட்கடத்தல்காரர்களும் அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4