மதுபானசாலைகள் – இறைச்சிக் கடைகள் மற்றும் சூதாட்ட விடுதிகளுக்கு பூட்டு!
Prabha Praneetha
2 years ago

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் போன்றவற்றையும் இன்று மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



