வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் பலி
#SriLanka
#Murder
#Lanka4
Shana
2 years ago

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10) காலை இடம் பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.



