வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் பலி

#SriLanka #Murder #Lanka4
Shana
4 years ago
வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் பலி

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று (10) காலை இடம் பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4