எரிபொருள் தாங்கி ஊர்தியை வீதியில் நிறுத்தி டீசல் விநியோகித்த இருவர் கைது!
Mayoorikka
2 years ago

டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஊர்தியை சீகிரியா - திகம்பதஹ பகுதியில் நிறுத்தி அதிலிருந்து டீசலை விநியோகித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதாகினர்.
சம்பவம் தொடர்பில் டீசலை ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஊர்தியின் சாரதி மற்றும் அவரது உதவியாளரே கைதாகினர்.
இதன்போது, எரிபொருள் தாங்கியில் இருந்து விநியோகிக்கப்பட்ட 210 லீற்றர் டீசல் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.



