சுயாதீனமாக செயற்பட சம்பிக்க ரணவக்க தீர்மானம்!
Mayoorikka
2 years ago

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி தான் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் பாராளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தியே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.



