நாடு முழுவதும் நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது- லிட்ரோ நிறுவனம்

Prabha Praneetha
4 years ago
நாடு முழுவதும் நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது- லிட்ரோ நிறுவனம்

நாடு முழுவதும் நாளை சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லிட்ரோ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எந்தவொரு சமையல் எரிவாயுவும் நாளைய தினம் விநியோகம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4