நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும்-காஞ்சன விஜேசேகர
Kanimoli
2 years ago

நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவத்துள்ளார்.
அதற்கமைய, 5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக் தொன் பெற்ரோல் என்பன விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



