பௌத்த தேரர்களை காடையர்களாக்கினர்-கல்கந்தே தம்மானந்த தேரர்

Kanimoli
4 years ago
பௌத்த தேரர்களை காடையர்களாக்கினர்-கல்கந்தே தம்மானந்த தேரர்

முகத்தின் காயங்களை ஆற்றாவிட்டால் குடும்ப வன்முறை துன்புறுத்தல்கள் சிறுவர் துஸ்பிரயோகம் என்பன அதிகரிக்கும் என தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதி இல்லாத நாட்டில் பயங்கரவாதம் உருவாகின்றது என பௌத்த கற்கைநெறிகளிற்கான வல்பொல ராகுல நிர்வாகத்தின் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பௌத்த தேரர்களை காடையர்களாக்கினர்
பௌத்த கவசத்தைப் பயன்படுத்தி குருமார்களை காடையர்கள் போல் வளர்த்தது சிறிலங்கா அரசாங்கமே!

இந்த அரசாங்கம் பௌத்தமத குருமார்களை காடையர்கள் போன்று வளர்த்தது, ஊக்குவித்தது, பல்வேறு இடங்களில் அவர்களை பயன்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி பொறுப்புக்கூறல் என்பது அரசமைப்பிலோ அல்லது நீதித்துறையிலோ உள்வாங்கப்படவில்லை சேர்க்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் என்பது செயலமர்வுகளை நடத்துவது அறிக்கைகளை வெளியிடுவது டொலர்களை பெற்றுக்கொள்வதில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இம்முறை அரசியலமைப்பு ஆபத்தான விதத்தில் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் முஸ்லிம்களை ஆபத்தானவர்களாக சித்தரித்தனர். சிங்கள பௌத்தவர்களை தனியான குழுவாகவும் ஏயை சமுகத்தினரை எதிரிகளாகவும் காண்பித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த கவசத்தை தனது நலனிற்காக அதிகளவிற்கு பயன்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று முன்னைய அரசாங்கங்களும் சிங்கள பௌத்த கொள்கையை பயன்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4