காணாமல் போயிருந்த மூன்று யுவதிகள் தொடர்பில் வெளியான தகவல்
Kanimoli
2 years ago

திருகோணமலை – கந்தளாய் பகுதியில் நேற்று காணாமல் போயிருந்த மூன்று யுவதிகள் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, குறித்த யுவதிகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கந்தளாய் பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரிலுள்ள கேக் நிறுவனமொன்றில் இம் மூன்று இளம் யுவதிகளும் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (3) மாலையில் வேலைக்குச் சென்றோர் வீடு திரும்ப வில்லை எனவும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , யுவதிகளை கண்டுப்பிடித்துள்ளனர்.



