பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு!

Mayoorikka
4 years ago
பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு!

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர் 15 வயதுடைய பாடசாலை மாணவர் என்றும் இவர் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து சில நாட்கள் கழித்து திரும்பி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4