இலங்கைக்கு உதவ இந்திய – ஜப்பானிய தலைவர்கள் உடன்பாடு
Mayoorikka
3 years ago

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க உதவுவதற்கு இந்திய மற்றும் ஜப்பானிய தலைவர்கள் இணங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருக்கு இடையே குவாட் உச்சி மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்விடயம் தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



