பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக விமானப்படையில் பணியாற்றவில்லை: உறுதி செய்த இலங்கை விமானப்படை

Prathees
4 years ago
பாராளுமன்ற உறுப்பினர்  அருந்திக விமானப்படையில் பணியாற்றவில்லை: உறுதி செய்த இலங்கை விமானப்படை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ இலங்கை விமானப்படையில் விமானியாக அல்லது கெடட்டாக கடமையாற்றியதாக நேற்று (19) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை விமானப்படை மறுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை விமானப்படையில் சேவையாற்றியதாக தகவல்கள் இல்லை என பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எம்.பி., ஒருமுறை விமானத் தகுதித் தேர்வில் பங்கேற்றதாகவும், ஆனால் அங்கு தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை விமானப்படையில் கேடட்டாக கூட சேர்ந்ததாக எந்த தகவலும் இல்லை என குரூப் கப்டன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது தனது வீட்டிற்கு தீவைத்த குண்டர்கள் குழுவினால் தனது வீடு மற்றும் விமானப்படையின் விமானப் பதிவுகள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விமானப்படையில் தனது பெறுமதிமிக்க வேலையை விட்டுவிட்டு அரசியலில் பிரவேசித்துள்ளதாகவும், இவ்வாறான தியாகத்தை செய்த தமக்கு நேர்ந்ததை எண்ணி வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த அழிவின் காரணமாக நான் விமானத்தில் இருந்ததை இன்று காட்ட எதுவும் இல்லை.

அன்றைய காலத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பறக்கும் போதுஇ ​​அந்தக் காலத்தில் கணினி மயமாக்கும் வசதிகள் இல்லாததால்இ அவை பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன.

தீயில் அந்த நோட்டுகள் அனைத்தும் எரிந்து நாசமாகிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4