யாழில் இடம்பெற்ற உந்துருளி விபத்து - மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

Reha
4 years ago
 யாழில் இடம்பெற்ற உந்துருளி விபத்து - மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

எதிரெதிரே வந்த இரு உந்துருளிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயங்களுக்குள்ளான மேலும் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம், உரும்பிராய் பகுதியில் உந்துருளி ஒன்று, மின்கம்பத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4