இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் மேலதிக பாதுகாப்பு தொடர்பில் விரைவில் நடவடிக்கை
Nila
2 years ago

இன்றைய சபை அமர்வில் சபாநாயகர் மஹிந்தயாப அப்பேரவர்தன கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக பொது மக்களின் பாதுகாப்பு உட்பட,பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் கேள்விக்கு குறியாகியுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு தேவை. தற்போது உள்ளதை விட மேலதிக பாதுகாப்பு தேவை.இவ்வாறான விடயங்கள் சபாநாயகர் தலைமயில் இடம்பெற்ற கட்சித்தலைவர் கூட்டத்தில் பலராலும் முன்வைக்கப்பட்டது.
இதனை அடிப்படையாகக்கொண்டு உறுப்பினர்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்குவது தொடர்பில்,பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்



