வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 159 பேர் கைது!
Prabha Praneetha
2 years ago

காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசங்களிலும் நாடளாவிய ரீதியிலும் நபர்களை தாக்கி அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மேலும் 159 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நீர்கொழும்பில் சொகுசு ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீர்கொழும்பு பொலிஸாரால் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.



