வன்முறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம்

Mayoorikka
4 years ago
வன்முறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம்

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறைகள் உட்பட இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதால், தாம் மிகவும் கவலையடைந்துள்ளதாக பச்லெட் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வகையான வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் அனைத்து தாக்குதல்கள் குறித்தும் விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணையை தொடங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4