இரண்டு தொடர் போராட்டம்... சூடுபிடிக்கும் அலரிமாளிகை சூழல்!
Mayoorikka
3 years ago

கொழும்பில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது இரண்டு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் உட்பட ஆதரவாளர்களால் இது நடத்தப்படுகிறது.
மறுபுறம், பிரதமர் பதவி விலகக் கோரி மைனா கோகம போராட்டக்காரர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.



