எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம்
Prabha Praneetha
3 years ago

எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நுகர்வோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தற்போது தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுகிறது என அவர் கூறினார்.
இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாக லிட்ரோ தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



