இலங்கையில் அவசர கால சட்டம் நீக்கப்படும் காலம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம்!
Nila
3 years ago

மக்களின் வாழ்க்கையை பாதுகாத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை முன்னெடுக்கவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தவிர்ப்பதற்கு குறுகிய காலத்திற்கு இந்த அவசர கால நிலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இயல்பு நிலை திரும்பியதன் பின்னர் அவசர கால நிலை மீளப்பெற்றுக் கொள்ளப்படும் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



