காலி முகத்திடல் போராட்ட விசாரணையிலிருந்து விலகினார் கொழும்பு மேலதிக நீதவான்
Mayoorikka
3 years ago

காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டம் தொடர்பில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதில் இருந்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணாவெல விலகியுள்ளார்.
குறித்த விசாரணை நடவடிக்கையில் இருந்து அவர் சுயாதீனமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தொடர்பில் ஏற்கனவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் இரண்டு வழக்குகளை பொலிஸார் தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தெரிவித்தார்.



