வங்கி முறைக்கு வெளியே அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த நடவடிக்கை

Prathees
4 years ago
வங்கி முறைக்கு வெளியே அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த நடவடிக்கை

வங்கி முறைக்கு வெளியே அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

உண்டியல் மற்றும் ஹவாலா ஊடாக இவ்வாறான அந்நியச் செலாவணி பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், இவ்வாறு மாற்றப்படும் அந்நியச் செலாவணி அத்தியாவசியமற்ற இறக்குமதிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, மத்திய வங்கியும் நிதி அமைச்சும் பணத்தை மீண்டும் வங்கி முறைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

முதற்கட்டமாக நிதியமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது என்றார்.

இதேவேளை, இந்த நிறுவனங்கள் சம்பாதிக்கும் டொலரில் ஒரு சதவீதத்தை, அந்நியச் செலாவணியை ஈட்டும் அனைத்து தொழில்கள் மற்றும் சேவைகளுக்கும் தேவையான மூலப்பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4