என்னை பதவி விலகச் சொல்வது முறையற்றது, இடைக்கால அரசுக்கு நான் தலைமை தாங்க தயாராக இருக்கிறேன் - பிரதமர்
Prabha Praneetha
3 years ago
-1-1-1-1.jpg)
இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்காக தம்மை பதவி விலகுமாறு எவரும் கூறுவது முறையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அவ்வாறான ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு தாம் தலைவராக இருப்பேன் என பிரதமர் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.
“நான் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன். என்னை பதவி விலகச் சொல்வது முறையற்றது,'' என்றார்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு வருட காலத்திற்கு அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசாங்க பிரதிநிதித்துவத்தை அமைப்பதற்காக பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியதையடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.



