இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 23-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-அதிகம்

அளவுக்கு
அதிகமானால்,
பற்று வெறியாகும்,
உணவு நஞ்சாகும்,
உரிமை ஆணவமாகும்,
உறவு பகையாகும்
வரவு பாரமாகும்
புகழ் போதையாகும்
பக்தி குருடாகும்
அளவான வாழ்வே
உன்னத வளமாகும்!

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

மரம் பட்டுப்போனால்...
பறவைகள் வருவதில்லை...!
வாழ்ந்தவன் கெட்டுப்போனால்....
உறவுகள் மதிப்பதில்லை....!

பொன்மொழி - 03 -

தலைப்பு:-வெற்றி

ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும் போது
ஊமையாய் இரு....
புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு....
எளிதில் வெற்றி பெறுவாய்....!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-விழிப்புணர்வு

ஆயிரக்கணக்கான 
கேள்விகள் இருக்கலாம்,
ஆனால் அதற்கு ஒரே ஒரு
பதில்தான். உனது
விழிப்புணர்வு.....!!

பொன்மொழி - 05 -

தலைப்பு:-ஏமாற்றம்

பல ஏமாற்றங்களைச் சந்தித்து
விட்டேன் என்று யாரிடமும்
சொல்லி அழாதே....
உன் பலவீனத்தை புரிந்து
கொண்டு அவர்களும் உன்னை
ஏமாற்றுவார்களே தவிர ஆறுதலாக
இருக்க மாட்டார்கள்!