தெற்காசியாவிலேயே எரிபொருள் விலையேற்றம் அதிகம் உள்ள நாடு இலங்கை: நாணயமதிப்பிழப்பில் சூடானுக்கு அடுத்தபடியாக...

Prathees
4 years ago
தெற்காசியாவிலேயே எரிபொருள் விலையேற்றம் அதிகம் உள்ள நாடு இலங்கை: நாணயமதிப்பிழப்பில் சூடானுக்கு அடுத்தபடியாக...

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, தெற்காசியாவிலேயே எரிபொருள் விலையேற்றம் அதிகமாக உள்ள நாடாக இலங்கையை குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 113.19 இந்திய ரூபாயாக உள்ளது

நேபாளத்தில் நேபாள ரூபாய் 158.76 ஆவும், பாகிஸ்தானில் அந்நாட்டு நாணயம் 152.06 ரூபாயாகவும், பங்களாதேஷில்  பங்களாதேஷ் நாணயம் 87.49 ரூபாயாகவும் உள்ளது.

தற்போது இலங்கையில்  ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 289 ரூபாவாகவும் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தற்போது 339.99 ஆக உள்ளது.

சர்வதேச தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படிஇ உலகில் டொலருக்கு நிகரான நாணயமாக இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாணய மதிப்பிழப்பின் அடிப்படையில் இலங்கை சூடானுக்கு சற்று கீழே உள்ளது மற்றும்  சூடான் பவுண்டின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 447.50 ஆக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4