நாட்டில் உள்ள அனைத்து அரசுக்கு சொந்தமான இணையதளங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது
#SriLanka
#government
Mugunthan Mugunthan
3 years ago

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க இணையத்தளங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு நிகரான வகையில் இணையத்தளங்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல அரசாங்க வலைத்தளங்களை ஹேக்கர்கள் குழு தாக்கக்கூடும் என்று சமூக ஊடகங்களில் நேற்று தகவல் பரவியது. எவ்வாறாயினும், அவ்வாறான சம்பவம் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதல்கள் ஒரு பொதுவான நிகழ்வு என்றும், அவற்றைச் சமாளிக்க தரவு பாதுகாப்பு அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.



