ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்..: தீர்மானத்திற்கு கட்சி தலைவர்கள் தயார்..
Prathees
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு பல கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரினால் ஜனாதிபதி பதவி விலகத் தயார் என சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறிமதாச நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எனினும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை சபாநாயகர் மறுத்துள்ளார்.



