இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்கத் தயார்: ரணில்

Mayoorikka
4 years ago
இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்கத் தயார்: ரணில்

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (17) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இளைஞர்களின் கோரிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த அரசாங்கமும் விலக வேண்டும். மக்கள் உண்மையில் என்னை விரும்பினால், இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகியக் கால தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் தெரிவித்தார். 

தற்போதைய நெருக்கடி நிலைமைகளை ஒன்றரை வருடங்களுக்குள்  தீர்க்க முடியும் எனவும் ரணில் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4