இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!

Prabha Praneetha
3 years ago
இலங்கை தமிழர்களுக்கு உணவு தானியங்கள்!

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப விரைவில் உரிய வசதி செய்துதர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கைத் தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.

 குறிப்பாக கடந்த 22.03.2022 அன்று 16 நபர்கள் (கைக்குழந்தை உட்பட) கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வாறு வரும் இலங்கை தமிழர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொந்த நாட்டில் வாழ முடியாமல் தங்களுடைய வாழ்வை இழந்து, இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி வரும் இலங்கைத் தமிழர்களை சக மனிதர்களாகக் கருதி, அவர்களை அரவணைக்க வேண்டியது நம்முடைய கடமை .

தற்போது இலங்கையிலுள்ள அசாதாரண சூழ்நிலையில், இந்தியாவிற்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கும், ஏற்கெனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று, தற்காலிகப் புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை (Special Provisions to give temporary asylum) வழங்கிட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 01.04.2022 அன்று தமிழ்நாடு முதல்வர் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

அக்கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று இந்தியப் பிரதமரை தான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ​​இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்குப் பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!