மீண்டும் இலங்கைக்கு கடன் வழங்கவுள்ள சீனா:பாலித கொஹொன தெரிவிப்பு

Nila
4 years ago
மீண்டும் இலங்கைக்கு கடன் வழங்கவுள்ள சீனா:பாலித கொஹொன தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடியால் பாரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இலங்கைக்கு, சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் இதற்கான உறுதியை அளித்துள்ளதாக இலங்கையின் சீனாவுக்கான தூதுவர் பாலித கொஹொன தெரிவித்தார்.

இதன்படி இலங்கை பெய்ஜிங்கில் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைப் பெற உள்ளது.

இதன் மூலம் ஜூலையில் நிலுவையில் உள்ள சீனக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியும்.

அத்துடன் ஆடை ஏற்றுமதித் தொழிலுக்குத் தேவையான பொருட்களை 1.5 பில்லியன் டொலர் கடன் வரியில் கொள்வனவு செய்யமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

தற்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, எதையாவது விரைவாகச் செய்யக்கூடிய நாடுகளில் சீனாவும் ஒன்றாகும் என்று கோஹன தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் இருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அண்மையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதேவேளை இலங்கை அதிகாரிகள் இந்த வாரத்தின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்து, இலங்கை இந்த ஆண்டு செலுத்த வேண்டிய 8.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடனைச் செலுத்துவதற்கு உதவும் சாத்தியமான வழிகளை சரிசெய்வார்கள் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4