கோத்தா வேண்டும் ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றால் 5000 ருபாய்: கலந்து கொண்ட நபர் கூறிய தகவல்
#Gotabaya Rajapaksa
Prathees
3 years ago

கோத்தா வேண்டும் என்ற பேரணிக்கு செல்ல வருமாறு எனக்கு 5000 ருபாய் பணம் கொடுத்தார்கள். பேரணிக்கு வரும்போது முஸ்லிம் தொப்பியும் கொண்டுவருமாறு பிக்கு ஒருவர் கூறியதாக பேரணியில் கலந்து கொண்ட நபரொருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் குடு பாவிப்பவர்கள். குப்பை அள்ளுபவர்களையே கோத்தா வேண்டும் என்ற பேரணிக்கு அழைத்துச் சென்றனர்.
5000 ரூபாய் பணமும் குடு பைக்கற்றும் உணவும் தருவதாக கூறினார்கள்.
கொழும்பில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பேரணிக்கு வந்த ஒருவர் யூடியூப் சேனலுக்கு தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.



