ஆறு மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ள எம்பி

Nila
4 years ago
ஆறு மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு  அழைப்பு விடுத்துள்ள எம்பி

இந்த நாட்டை படுகுழியில் இருந்து மீட்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆறு மாதங்களுக்கு உண்மையாக ஒன்றுபடுவோம் என 

சமகி ஜன பலவேகே கட்சியின் எம்பி ஹரின் பெர்னான்டோ  நாடாளுமன்றத்தில் நேற்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

நாடு இவ்வாறானதொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள போதிலும் பாராளுமன்றத்தில் கட்சிகளை இணைத்துக் கொள்ள முடியாமல் போனால் எமது அரசியலில் பயனில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

எங்கள் கட்சியினரும் என்னை ஏசுவார்கள். ஆனால் அது முக்கியமில்லை. சஜித் அடுத்த ஜனாதிபதியாக வரலாம்.

அடுத்த ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க வரலாம். மக்கள் என்ன செய்தாலும் வாழ வைக்க வேண்டும். இவர்களால் அரசியல் செய்கிறோம்.

இப்படிப்பட்ட நேரத்தில் ஒன்று சேர முடியாவிட்டால் பயனில்லை. 

இந்த நேரத்தில் நாட்டின் சார்பாக தலையிட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

முடிந்தால், ஹர்ஷ டி சில்வா போன்ற படித்த, மிதமான மனிதரை ஜனாதிபதியாக்குவோம்.

ஆறுமாதங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் அரசியல் மாற வேண்டும். அமைச்சரவையில் குறைந்தது 50 சதவீத இளைஞர்கள் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் 70 வயதுக்கு மேல் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்.

நாம் அனைவரும் காபந்து அரசாங்கத்தை அமைத்து ஆறு மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவோம். அதற்காக ஒன்றுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4