நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்!

Mayoorikka
2 years ago
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்!

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விவாதம் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று கொழும்பில் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.