பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

Nila
2 years ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

மின்சாரம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால், தகுதிவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதற்கு அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்து பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த அத்தியாவசிய சேவைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கான உடனடி முடிவுகளை செயல்படுத்த இந்த அமைச்சு நியமனமானது அவசியமானதாக கருதப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.