பிரதமரின் கார்ல்டன் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள் : கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்
#SriLanka
#PrimeMinister
#Home
Mugunthan Mugunthan
4 years ago
தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
இதன் போது ஆர்பாபட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.
தங்காலை - கதிர்காமம் வீதியின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் வீதியை மறித்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே