சுவீடனுக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் - அடுத்து நடக்கபோவது என்ன?

Nila
4 years ago
சுவீடனுக்குள் நுழைந்த ரஷ்ய போர் விமானம் - அடுத்து நடக்கபோவது என்ன?

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷிய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் (மார்ச்) 2ஆம் தேதி, நான்கு ரஷிய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக சுவீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை சென்று அந்த ரஷிய விமானங்களை புகைப்படம் எடுத்துள்ளன.

அப்போதுதான் ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் தெரியவந்துள்ளது. ஆம், சுவீடன் எல்லைக்குள் நுழைந்த நான்கு ரஷிய போர் விமானங்களில் இரண்டு, அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு வந்துள்ளன.

ரஷிய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்தது தவறுதலாக நடந்த ஒரு விஷயம் அல்ல. அது வேண்டுமென்றே ரஷியா செய்து உள்ளதாக சுவீடன் கூறுகிறது.

சமீபத்தில் சுவீடனும், பின்லாந்தும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன.

ஆகவே, அவை நேட்டோ அமைப்பில் இணையக்கூடும் என்று கருதும் புதின் அந்நாடுகளை பயமுறுத்தவே, வேண்டுமென்றே அணு ஆயுதங்களுடன் தன் போர் விமானங்களை தன் நாட்டு எல்லைக்குள் அனுப்பியதாக சுவீடன் நம்புகிறது.

காரணம், சுவீடனோ அல்லது பின்லாந்தோ நேட்டோ அமைப்பில் இணைந்தால், அவற்றிற்கெதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்புதான் புதின் எச்சரித்திருந்தார்.

பனிப்போருக்குப் பின் சுவீடன் இராணுவத்துக்காக செலவு செய்வதை பெருமளவில் குறைத்திருந்தது. ஆனால், 2014இல் ரஷியா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, உஷாரான சுவீடன் மீண்டும் தனது இராணுவத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது என சுவீடன் குற்றம்சாட்டி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4