எரிபொருள் தட்டுப்பாடு – 25 வீதமான பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில்
Mayoorikka
3 years ago

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 25 வீதமான தனியார் பஸ்கள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபடுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 06 டிப்போக்களுக்கு கோரப்பட்ட எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.



