தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்!

Reha
2 years ago
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்!

தொடருந்து கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்த தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அதனை இடைநிறுத்தியுள்ளது.

இன்று முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும், போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, குறித்த தொழிற்சங்க போராட்டத்தை இன்ற நண்பகல் 12 மணிவரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.