காரணமின்றி எரியும் வாகனங்கள் - இன்னும் இரண்டு இடங்களில் எரிகிறது
#SriLanka
Mugunthan Mugunthan
4 years ago
கொழும்பு சேதாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
எனினும், சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரியால் தீயை கட்டுப்படுத்த முடிந்தது.
இதேவேளை, வாத்துவ - மொரந்துடுவ வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்த நிலையில், அப்போது தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே