கடல் அட்டைகளை கடத்திய மூவர் கைது

Prabha Praneetha
3 years ago
கடல் அட்டைகளை கடத்திய மூவர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன் நேற்று  மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுவதாக சுங்கத் துறையினருக்கு நேற்று இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சுங்கத்துறை கண்காணிப் பாளர்கள் கோகுல், சத்தியநாராயணன் உட்பட சுங்கத்துறை அதிகாரிகள் கடற்கரை பகுதிக்கு சென்ற பொழுது படகில் கடல் அட்டை மூடை ஏற்றிக் கொண்டிருந்த போது குறித்த படகை கைப்பற்றினர்.

இதன் போது குறித்த படகிலிருந்த கடல் அட்டைகளையும் கடத்த முயன்ற தேவிபட்டிணத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை சுங்கத்துறை அலுவலகத்தில் தடுத்து வைத்து நடத்திய விசாரணையில் கடல்வழியாக படகு மூலம் இலங்கைக்கு 700 கிலோ கடல் அட்டைகளை கடத்த இருந்தமை தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!